கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்கிறார்
- கேரளாவை
சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் ஐ.பி.எல்.
கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டப் புகாரில் சிக்கி போலீசாரால் கைது
செய்யப்பட்டார்.
- ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவருடன் மேலும் 2 வீரர்களும் கைது
செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து நாடு முழுவதும் சூதாட்டத் தரகர்களும்
கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி ஸ்ரீசாந்த் ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது கொச்சியில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வரும் ஸ்ரீசாந்த்
சினிமாவில் நடிக்க இருக்கிறார்.
- ஸ்ரீசாந்த் 2009-ம் ஆண்டிலேயே டைரக்டர் ஆஷிக் அபுவின் அறிமுகப்படமான
“டாடி கூல்” படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர்
கிரிக்கெட்டில் ஜொலிக்கத் தொடங்கவே சினிமாவை ஒதுக்கினார்.
- அதன்பின்னர் இன்னொரு பிரபல மலையாள இயக்குனரின் படத்திலும் நடிக்க
ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் அந்த
படமும் கிடப்பில் போடப்பட்டது.
- இந்தநிலையில் “கவுபாய்” படத்தை இயக்கிய டைரக்டர் பி.பாலசந்திர குமார்
அடுத்து இயக்க உள்ள “பிக் பிக்சர்” படத்தில் ஸ்ரீசாந்த் நடிக்க
இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தில்
ஸ்ரீசாந்த்துடன் பிரகாஷ் ராஜ் மற்றும் பிரபு தேவா ஆகியோரும் நடிக்க
உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
- படப்பிடிப்பை சென்னை, கொச்சி, துபாய் மற்றும் லண்டனில் நடத்த டைரக்டர்
முடிவு செய்துள்ளார். ஸ்ரீசாந்தின் பாஸ்போர்ட் போலீசிடம் இருப்பதால் பிற
நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment