அனுஷ்கா, ஹன்சிகா மோதலா? -டைரக்டர் ஹரி
சூர்யாவின்
சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர்.
கதையில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக
செய்திகள் வெளியாயின.
இதுபற்றி சிங்கம் 2 படத்தின் டைரக்டர் ஹரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அனுஷ்காவிடமும் ஹன்சிகாவிடமும் அவரவர் நடிக்க வேண்டிய கேரக்டர் பற்றி
படப்பிடிப்புக்கு முன்பே சொல்லி விட்டேன். இருவருக்கும் சம வாய்ப்பு
அளிக்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்ற
பேச்சுக்கே இடம் இல்லை. இருவரும் ஒன்றாக நடிக்க வேண்டிய சீன்கள் இருந்தன.
எந்த விதமன வருத்தமும் இன்றி நடித்தார்கள். இருவர் கேரக்டருமே
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக சிங்கம் 2 வை உருவாக்கியுள்ளோம். முதல்
படத்தில் தொடர்ச்சியை பார்த்த மாதிரியே இருக்கும். சிங்கம் 2-ல் சர்வதேச
பிரச்சினையை சொல்லி உள்ளோம். இதனால் ஹாலிவுட் வில்லன் டேனிஸ் சப்பானியை
நடிக்க வைத்துள்ளோம். ஹாலிவுட் வில்லன்களை கொண்டு நம்மூர் சண்டையை போட
வைத்துள்ளோம். சூர்யா போலீஸ் உயர் அதிகாரியாக வருகிறார். புத்திசாலித்தனமாக
வில்லன்களை அவர் தாக்குவது கைதட்ட வைக்கும். சண்டைகள் படுவேகமாக
இருக்கும்.
கடலில் நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் சூர்யா மோட்டார் படகை ஒட்டி
செல்லும் சேசிங் காட்சி சீட் நுனிக்கு இழுக்கும் ஹெலிகாப்டரில் கேமரா
வைத்து இதை எடுத்தோம். ரோடுகள், மக்கள் கூடும் இடங்களில் அதிக சீன்கள்
எடுக்கப்பட்டன. கடலுக்குள் படகு, வள்ளம், கப்பல்களில் படப்பிடிப்பை
நடத்தினோம்.
சூர்யா ஆபத்தான சீன்களிலும் டூப் போடாமல் நடித்தார். சந்தானம் காமெடி
களை கட்ட வைக்கும். அனுஷ்காவுக்கும் சந்தானத்துக்கும் டூயட் பாடலும்
படத்தில் உள்ளது. படம் திருப்தியாக வந்துள்ளது. மக்கள் ஜாலியாக ரசிக்கும்
படமாக இருக்கும், அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment